Wednesday, May 14, 2008

ரோபோ - 1

மார்கெட்டில் இரண்டு வாரமாக ரோபோ பொம்மைக்கு ஏக கிராக்கி.

"அப்பா ஸ்கூல்ல எல்லாரும் வாங்கிடாங்க பா, நாமளும் ஒன்னு வாங்கலாம், ரெய்ம்ஸ் எல்லாம் சொல்லுமாம் பா....சிகப்பு லயிட்டோட நடக்குமாம், இன்னிக்கு வாங்கிதாப்பா ?"

"அவன் எதுமே கேட்டதில்லை, முன்னுறு ருபாய் தானாம், கனகா அக்கா வீட்ல நெத்து வாங்கி இருக்காங்க, இன்னிக்கு வரும் போது வாங்கிட்டு வாருங்களேன் !!!"

நான் தமிழ்நாடு கேரளா எல்லையில் உள்ள ஒரு சிறு நகரத்தில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிலையத்தில் உதவி இன்ஜினியர், குவாடர்ஸ் வீடு, மனைவி, ஒரு மகன் சந்திரன், வயது ஐந்து, குவாடர்ஸ் அருகில் இருக்கும் கேந்திரிய வித்யாலயாவில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான், படு சுட்டி. அளவான சம்பளம், நிம்மதியான வாழ்கை, இந்த சந்தர்ப்பதில் தான், ரோபோ பொம்மை எங்கள் வீட்டுக்கு வந்தது. இரண்டு டிரிப்ள் எ பாட்டிரி போட்டால் இயங்கும். ஆங்கிலத்தில் ரெய்ம்ஸ் நடந்து கொண்டே சொல்லும். சந்திரனுக்கு ரொம்ப படித்து போனது, வீட்டில் இருக்கும் நேரம் எல்லாம் அந்த ரோபோவுடன், தான்.

அன்று இரவு, எதோ நெருடுவது போல் உள்ளதே என்று விள்க்கை போட்டால் பக்கதில் அந்த ரோபோ பொம்மை, அதன் தலையில் உள்ள சிகப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது, சந்திரனுக்கு என் அருகை தான் படுக்க வேண்டும், பொம்மை அவன் அருகில் இருந்தது, "தூங்கும் போதும் பொம்மையா !!! " பொம்மை அனைத்து விட்டு படுத்தேன்.

மறு நாள், சந்திரனிடம், "ஏண்டா தூங்கும் போது பொம்மையோடு தான் தூங்குவியா ?"

"இல்லப்பா, பொம்மைய அலமாரியில் வைத்து விட்டு தான் தாங்கினேன்..."

"என்னடா ...நைட் அது உன் பக்கத்தில் ஆன் அகி கிடந்த்தது லைட் எல்லாம் எரிந்து"

"என்னப்பா சொல்ற இரண்டு நாளா அதுக்கு பேட்ரி வேண்டும்னு அம்மாகிட்ட கேட்டா , வாங்கி தர மாட்டேன் றா ?"



தொடரும்

No comments: