Wednesday, September 3, 2008

Time Pass -1

நல்ல பத்தி எழுத்தாளர் ஆக வேண்டும் என்றால் நாட்டு நடப்புகளை நன்றாக கவனிக்க வேண்டும் என்று தான் இத்தனை நாட்களாக நான் நினைத்து வந்தது. ஆனால் தன்னை சுற்றி நடப்பதை மட்டும் கூர்ந்து நோக்கினால் போதும் போல !!!. சில பல எழுத்தாளர் வலைப்பூவை படித்த பின்னர் வந்த முடிவு இது.

"Writers are Exibitionist". "எழுதுவது படிப்பதற்கு தான் இல்லை தன்னை பற்றி பறை சாற்றுவதற்கு தான்" என்ற தலைப்பில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றம் நடத்தலாம். மன்னர் காலத்து புலவர் Mentality இன்னும் போகவில்லை என்று தான் தெரிகிறது. போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு வரும் கடிதங்களை மற்றும் அவர் தம் பதில்களையும் இணையத்தில் வெளியிடுகிறார்கள். முக்கால்வாசி கடிதம் சப்பை !!!

சுஜாதாவிடம் ஒருவர் தன்னை எழுத்தாளர் என்று அறிமுக படுத்தி
கொண்டார்."Writing சரி , Survival கு என்ன பண்றேள் ?" இது தான் சுஜாதா பதில்.
Orhan Pamuk's My Name is Read புத்தகத்தில் ,"நல்ல முடிவாக தான் எடுத்து இருக்கிறான், வரை கலையை தொழிலாக கொள்ளாமல் பொழுதுபோக்காக கொண்டதால் தான் இன்றும் அக்கலையில் ஈடுபாட்டோடு இருக்க முடிகிறது." என்று வரை கலை ஆசான் ஒரு கதாபாத்திரத்தை நோக்கி கூறுவார். தமிழில் புல் டைம் எழுத்தாளர் அனைவரும் அந்த ஆசானின் அறிவுரையை பின் தொடர்ந்தால் ,நல்ல படைப்புக்களை படைக்க வாய்ப்பு உள்ளது இன்று பட்சி கூறியதாக பருந்து சொன்னது.