Saturday, October 25, 2008

கிணற்றுத் தவளை வரலாறு

வரலாறு, படிப்பது என்றுமே வேப்பங்காய். தேதிகள் நினைவில் இருக்க வேண்டும், வரைப்பட்ம் கச்சித்தமாக வரைய வேண்டும் இப்படி பல. மொத்ததில் பரீட்சையில் பாஸ் பண்ணும் அளவு தெரிந்தால் போதும் என்று தான் தோன்றும். நான் லினியர் முறையில்  நம் வரலாற்றுப்  பாடத்திட்டம் அமைக்கப்பட்டதே இதற்கு முக்கியமான காரணம்.

ஹராப்பா கலாச்சாரம் பற்றி படிக்கும் போது, அதே சமயத்தில் ஐரோப்பா எப்படி இருந்தது, சீனாவில் என்ன நடந்தது என்று நமக்குத் தெரியாது. முக்கியமாக எதற்காகப் படிக்கிறோம் என்றும் தெரியாது. பாரதி சரித்திரம் தேர்ச்சி கொள் என்று கூறியது தேதிகளை மனப்பாடம் செய்ய அல்ல.

வரலாறு என்பது மனித வளர்ச்சியின் ஒரு பதிவு, உலகப்பரப்பில் வந்து சென்ற பலவிதமான மனிதர்களின் உழைப்பு, சிந்தனை இவைதான் இன்றைய உலகின் அஸ்திவாரம்.  அவர்களின் எண்ணவோட்டத்தை அறிய முற்படுவது தான் வரலாறின் முக்கிய வேலை. சம்பவங்கள் நடந்த தேதி, இடம் மட்டும் நினைவு வைத்துகொள்ள வரலாறு தேவை இல்லை. அந்த காலக்கட்த்தில் எந்த மன நிலையில் மனிதர்கள் அந்த சம்பத்தை நட்த்தினார்கள் என்பது மிக முக்கியம்.

அதே சமயம் அவர்களை சுற்றி இருந்த உலகம் எப்படிப்பட்டது, மற்ற தேச மக்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து இருந்தனர், இப்படி பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் வரலாறு படிப்பது அஸ்திவாரம் இல்லாம் வீடு கட்டுவதற்கு சமம்.

Sunday, October 19, 2008

அமெரிக்கா

மேற்க்கில், முக்கியமாக அமெரிக்க கலாச்சாரத்தில் subtle என்ற வார்த்தைக்கு என்றுமே இடம் கிடையாது. மெளம் என்ற மொழி அங்கே வழக்கொழிந்து போய் விட்டது.

“Whatever An american says, take it with a pinch of Salt"

சிட்டிகை இல்ல, ஒரு மூட்டை உப்பு போட்டு தான் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டும். எதற்க்கு எடுத்தாலும் “Great, Fabulous, Wow" இது தான்.

“Wow Factor" என்ற வார்த்தையை உண்டாக்கிய பெருமை அவர்களைச் சேரும். அது இல்லாத எதுவுமே உருப்படாது. இந்த லட்சனத்தில், நம்ம பசங்களும் அவர்களை பின் பற்றினால்,

Literally பின் பற்றினால் என்ன அவஸ்த்தை பட நேருமோ அவை அனைத்து பட வேண்டும்.

நான் படித்த புத்தகங்கள்

புத்தகங்கள் வழி உலகத்தைப் பார்ப்பது ஒரு தனி அனுபவம். ஒருவர் வாழ்நாளில் எவ்வளவு புத்தகம் படிக்க முடியும் ? எப்படி படித்தோம் என்பது தான் முக்கியமே தவிர எவ்வளவு என்பது

இல்லை, இந்த தர்க்கத்துக்குப் போகாமல் நேரடியாக ஒரு கணக்கு பார்க்க முடியுமா ?

www.goodreads.com, மற்ற நெட்வொர்க்கிங் தளத்தை விட சற்று மாறுப்பட்டது. நாம் என்ன படித்தோம், படிக்கின்றோம், படிக்க போகின்றோம், இவற்றின் பதிவே அதன் நோக்கம். நண்பர்கள்

கூட்டத்தை அழைக்கலாம், படித்ததைப் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் படித்த புத்தகங்களை வரிசைப் படித்தினால் ஐம்பத்தியாறு தேறியது. முப்பது வருஷத்தில் என்னால் முடிந்தது இவ்வளவு தான். தோராயமாக அறுபது வருடம் வாழ்ந்தால் மேலும் 50

புத்தகமே படிக்க முடியும். இந்த கணக்கில் சென்றால்.. வாழ்நாளில் நூறு புத்தகம் தான் படிக்க இயலுமா ?

fiction படிப்பது மிக எளிது, ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தை முடித்து விடலாம், Non-Fiction, philosophy travel, sattire, classic வகைகள் படிக்க பொறுமையும், ஆவலும் அவசியம் தேவை.

நண்பர் ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு அல்லது மூன்று non fiction படிப்பாராம். நானும் முனைந்த பொழுது, மூன்று ஐந்து ஆகிற்று, ஆனால் எந்த புத்தகமும் முடியும் போல தோன்றவில்லை. கதோபனிஷத் படிக்கும் பொழுது, மதுரை விமான நிலையத்தில் அமாங் த பிலிவர்ஸ் வாங்கினேன், படிக்க ஆரம்பித்தால் கிட்ட தட்ட முக்கால் வாசி முடிந்து விட்டது. திரும்பவும் கதோபனிஷத் விட்ட இடத்தில் தொடர முடியவில்லை !

ஒரு புத்தகம் படிக்கும் சமயம், ஒரு விதமான மெண்டல் கம்போஸர் செட் ஆகி விடுவதை தவிர்க்க இயலாது. அந்த மனநிலையில் தான் புத்தகம் மிக நெருக்கமாக நம்மிடம் பேசும்,

அந்நிலை தவறினால் தெரிந்த பாஷையும் அந்நியமாக தோன்றும். Every book chooses its reader, சும்மா ஜகன் மோகினி வசனம் கணக்காக இருந்தாலும் நம்பாமல் இருக்க

முடியவில்லை. சில எழுத்தை கேள்வி இல்லாமல் ஒத்துக்கொள்ள முடிகிறது, சிலவற்றை எவ்வளவு முயன்றாலும் காரித்துப்பத் தான் தோன்றுகிறது.

சாரு நிவேதிதா ஒரு கடிதம்

சாரு,

கடந்த ஆறு மாசமாக உஙகள் எழுத்தைப் படிக்க படிக்க ஒரு mixed feeling தான் தங்குகிறது, வெறுப்பு, பிரமிப்பு, exhaustion, இப்படி, சுருக்கமாக ஒரு rolla-coaster. ஒரு சமயம் ஹாரிசன் போர்டிடம் எப்படி உங்கள் படம் எப்படி சுப்பர் ஹிட் ஆகுது என்று கேட்ட பொழுது, “All my roles are, Ordinary Man doing extraordinary things" என்று கூறினார். உங்கள் எழுத்தும் அந்த வகையை சேர்ந்தது. “Extraordinary fantacies presented as everyday feelings/sensations. I wouldnt dare to use the term "words"". மிகச் சிலரால் தான் எழுத்தில் உணர்வை கொண்டு வரமுடியும். சில எழுத்துக்களை நாம் shere vocabulary க்காக படிக்கலாம், சிலதை கருத்துக்காக, சிலவற்றை சுவாரசியத்திற்க்காக.

குமுதம் கோணல் பக்கங்கள் ரொம்ப Built-Up என்று தோன்றியது, பார்க்
ஷெரடன் பார், பிடிக்காத கார் swift...இப்படி பல விஷயங்கள்.
கடந்த ஆறு மாசம் was a good enough Time, உங்கள் எழுத்தின் பல பரிமானங்களை அறிந்து கொள்வதற்க்கு. Zero Degree, வரம்பு மீறிய பிரதிகள், அரேபிய இலக்கியம், லாடின் எழுத்துகள், நாஸி அஜ்ரம், குட்டிக் கதைகள், கடவுளும் நானும், இப்படி every work was taking me on a rolla-coaster as I had mentioned before.

நான் படித்த புத்தகங்களில் charecterization துல்லியமாக செய்யக் கூடியவர் மூவர்.

fiction வகையில் Frederick Foresyth, Orham Pamuk (My Name is Red...ஒரு மாஸ்டர் பீஸ்....)
Non-Fiction வகையில் William Darymple. ஆனால் குட்டிக்கதை is an epitome of characterization. முன்னால் கூறிய பலருக்கும் ஒரு முழு புத்தகம் தேவைப்படும், ஆனால் ஒரு சில பாராக்களில் அதை இவ்வளவு சிறப்பாக செய்ய முடியும்னு நினைக்கல !!! Simply Amazing.....

Tuesday, October 14, 2008

ரஜினிகாந்த் கட்சி

ஐயா பெரியவரே, நீங்க ஐஸ்வர்யா ராய் பச்சன் பொண்ணு கூட டூயட் பாடுங்க, ஆன்மீக அராய்ச்சி புரிங்க.....ஆனால் பாவம் உங்க ரசிகர்களை இப்படி போட்டு குழாப்பதிங்க....

http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2017&cls=row3
"அரசியலுக்கு நான் வந்து தான் ஆகா வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது."

இதோட நிப்பாட்டி இருக்கலாம். உங்க ரசிகர்களும் தெளிவு ஆகி அவங்க வேலையை பார்க்க போவாங்க....ஆனால் உங்களுக்கு யந்திரன் சூப்பர் ஹிட் ஆக வேண்டும் ....அதனால்
"நான் அரசியலுக்கு வர முடிவெடுத்தால் என்னை யாரும் தடுக்கவும் முடியாது" என்று ஒரு பிட் போட்டாச்சு.

மாயாவதி தலைமையில் உங்க வீட்டு வாசலில் நின்று கொண்டு நீங்க வர கூடாதுன்னு ஆர்பாட்டம் நடக்குதா ?

சினிமால தான் நான் அப்படி இப்படி என்று டயலாக் விடறிங்க ....கேட்டா நான் சொல்லல இயக்குனர் சொன்ன மாதிரி பேசினேன் அப்படின்னு விளக்கம்...... (நன்றி குசேலன் படம்). இப்போ இப்படி பேச K.S.ரவிக்குமார் சொல்லி குடுத்தாரா ?

வாழ்க்கை வேற சினிமா வேற சார் ....அத நீங்க முதல்ல நல்ல புரிஞ்சு நடங்க....

Sunday, October 12, 2008

குஷ்பு குளம் மற்றும் ராசப்பர்

குற்றால குற வஞ்சியின் சில வரிகளை, குறிப்பாக சிங்கா சிங்கி உரையாடலை இன்று படிக்க நேர்ந்தது. திரிகூட ராசப்ப கவிராயர் அருமையான தமிழில் எதுகையும் மோனையும் கலந்து சில adult matter தூவி இருந்தார். ஆனால் முழுசா படித்தால் இளவட்ட conversation ஆக தான் தோன்றியது. தவறாக தோன்றவில்லை. நம்ம கலாச்சார காவலர்கள் இன்னும் படிக்கவில்லை பொலும். ராசப்பர் தப்பித்தார் !!!

ஒரு சிலருக்கு ஒழுங்கு கிறுக்கு பிடித்து ஆட்டி கொண்டு இருக்கும். எதிலுமே தவறு தான் தோன்றும், அவர் எங்கு நோக்கிலும் ஒழுங்கினமே தென்படும். நல்லது தெரிவதற்கு வாய்பே கிடையாது. இவ்வகை மக்கள், தினமும் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பொருள்களை அரை மணி நேரம் பார்த்து தியானம் போல் செய்து வந்தால் குணம் ஆவதற்கு வாய்ப்பு உண்டு.

பிரான்ஸ் நாட்டு (Wine) குடிமகன் ஒருவர் உலகப்பயணம் மேற்கொண்டார். சாதரணமாக இல்லை, Around the World without reservation, lift வாங்கியே உலகை சுற்றி இருக்கிறார். அசாத்திய தைரியம். அதுவும் இந்த நூற்றாண்டில், fellow மனிதனை மட்டும் நம்பி இவ்வளவு பெரிய risk !!!!!!

தமிழ்நாட்டு மக்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் கிடையவே கிடையாது. பாரதியார் பாடியதை தப்பாக புரிந்து கொண்டு , சரித்திரம் இகழ், ஜோதிடம் புகழ் என்று திரிந்து கொண்டு இருக்கிறார்கள், சான்று மதுரை மங்கம்மாள் சத்திரம், திருமலை நாயக்கர் மகால் இப்படி பல. ஜெமோ வலையில் குஷ்பு குளம் பற்றி படிக்கும் போது சிரிப்பதா அழுவதான்னு தெரியல. பம்பாய் படத்தில் மனிஷா கொய்ராலா ஆடிய பின்னர் தான் எங்க ஊரு பசங்களுக்கு ஒன்னுக்கு போகும் சுவர் மகால் சுவர்னு தெரியும் !!!