Wednesday, November 25, 2009

விஜய் டீவி - நீயா நானா

தமிழ் சேனல்களில், சற்று மாறுப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குவது விஜய் டீவி. மற்ற அனைத்தும் சினிமா, சினிமா என்று அலையும் பொழுது, டாக் ஷோ நிகழ்ச்சிகளை, பொதுமக்கள் ரசிக்கும் வகையில் குடுப்பது தனிச் சிறப்பு. பல வருடங்களாக இதை செய்து வருகிறது. யூகி சேது தான் இது போன்ற நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். அவர் நிகழ்ச்சி பற்றி அதிகம் சொல்ல ஒன்றும் இல்லை.

சமீப காலமாக கோபி நடத்தும் நீயா நானா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. ஒரு சுவாரசியமான தலைப்பைக் கொண்டு, இரு தரப்பும் விவாதிக்கும் பாணி நம் சேனல்களுக்குப் புதுசு. டாக் ஷோ நடத்துனரின் சாம்ர்த்தியம் தான் நிகழ்ச்சியின் வெற்றியை தீர்மானிக்கும். பட்டி மன்றங்கள் கேலிக்கூத்து ஆகி விட்டது. இராஜா சன் டிவில் காமெடி நிகழ்ச்சி நடுவர் ஆகி மதன் பாப் கூட செட்டில ஆகி விட்டார், லியோனி சினிமாப் பாடல்களைத் தொகுக்கச் சென்று விட்டார். அவர்கள் திறமைக்கேற்ற வேலை. இதை முன்னரே செய்து இருந்தால் பட்டி மன்றம் இன்று உயிரோடு இருந்து இருக்கும். போன வாரம் தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி இராஜா கூறினார். வெள்ளைக்காரன் எல்லாருக்கும் இங்கிலீஷ் தெரியாது. அவர் ஜெர்மனியில் பார்த்த வெள்ளைக்காரன் ஜெர்மன் மொழியில் தான் பேசினானாம். இவர்கள் நடத்திய பட்டி மன்றம் தான் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது. உடனே நம் மக்களில் பலர் படிக்காதவர். அவர்களுக்கு இந்த மாதிரி சொன்னால் தான் புரியும் என்று பலர் கிளம்பி விடுவார். படிக்காதது அவர் தப்பா ? நம்மை போல் படித்தவர் எல்லாம் பட்டி மன்றம் பார்க்கப் போனால், அவர்கள் கடைசி வரை படிக்கப்போவது இல்லை.

படிக்காதவங்க தான் இப்படி என்றால் படித்தவர்கள் அவர்களுக்கு ஒரு படி மேல் தான் உள்ளனர். நீயா நானா ஒரு எபிசோடுக்கு ஞானி சிறப்பு விருந்தினர். கணவன் மனைவி இடையே வரும் இடை வெளி பற்றிய விவாதம். ஒரு தரப்பு விவாதம் முடிந்தவுடன் கோபி ஞானியிடம் அபிப்பிராயம் கேட்க்க, அவரும் மனோதத்துவ மருத்துவர் போல், அந்த தம்பதியிடம் உள்ள குறையை எடுத்து உரைக்கிறார். சைக்காலஜி டிகிரியாவது இருக்கானு கேட்கனும். சமுக அக்கறை இருந்தா எங்கேயும் நாட்டாமை புரிய போகலாம் என்று நினைதார் போலும்.

Wednesday, June 10, 2009

வார்த்தை நேர்மை - ஆனந்த விகடன் மற்றும் எஸ்ரா

எஸ்.இராமகிருஷ்ணனின் எழுத்தின் பலம் அதன் நேர்மை. வார்த்தை ஜாலங்களுக்கு இடம் கிடையாது. எளிதான வார்தைகளின் ஊடே நம்மை “அடடா..” போட வைத்து விடுவார். அவரது பல கட்டுரைகள் இந்த வகையை சேர்ந்தவை.

ஆனந்த விகடனில் அவரின் தொடர் வரவுள்ளது என்ற அறிவிப்பு மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியது.முதல் கட்டுரை வாசனை பற்றியது. எதோ மிகவும் கஷ்டப்பட்டு எழுத முயன்றது போன்ற ஒரு தோற்றம். வார்த்தை நேர்மை இல்லை. விகடன் குழு எடிட் செய்தது போல் தோன்றுகிறது. விகடன் எப்போழுது ஒரு அறிவு ஜீவித்தனம் கொண்ட பத்திரிக்கை என்ற நினைப்போடு தான் செயல்படும். தரத்தில் குமுதம் போன்றதே. குமுதம் நடுப்பக்கத்தில் தமிழ் நடிகைகளின் படங்களை போடும், விகடன் இன்பாக்ஸ் என்ற பெயரில் இந்தி நடிகையின் படத்தை போடும்.

இது விகடனின் வேலை இல்லாமல் எஸ்ராவின் பங்களிப்பு என்றால், “சார் உங்க கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை.” கட்டுரையின் முடிவில் தகவல் பகுதி திணிப்பு போல் தோன்றுகிறது. இது எல்லாம் லேணா பார்த்துக்கொள்வார். நீங்கள் மீண்டும் உங்கள் இயறக்கையான பாணியில் எழுதுங்கள்.