Sunday, April 27, 2008

சிற்றிதழல் பரிச்சயம்.

சிற்றிதழல் பரிச்சயம்.
முன்தைய பதிவில் எனது சிறுகதை பரிச்சயம் பற்றி எழுதினேன், அதோடு continutation ஆக சிற்றிலக்கிய் இதழ்கள் படிக்கலாம் என்ற ஓர் எண்ணம். கூகுள் தேடல் ஒன்றும் பெரிதாக தரவில்லை. சுஜாதா கிருபையால் கணையாழி வலைதளம் பார்தேன், எனக்கு தெரிந்த இலக்கிய பத்திரிக்கை அது ஒன்று தான். அன்று எப்பொழுதும் போல் எனது வாடிக்கையான கடையில் நக்கிரன், ஜுனியர் விகடன், பாக்கியா இத்யாதி, இத்யாதி வாங்க சென்ற பொழுது தான் "உயிர் எழுத்து" பார்தேன். பல்பு எரிந்தது, ஆகா ராஜா ரொம்ப காலமா நாம தேடின சிற்றிலக்கிய பத்திரிக்கை இது தான்.
என்னவோ ஒரு அறிவு ஜீவி look அந்த இதழுக்கு இருந்தது. புளு கலர் அட்டை படத்தில் கிரேக்க அல்லது ரோமானிய சிற்பம், book logo ஒரு யாழி. யாருக்கு இந்த காலத்தில் யாருக்கு யாழி தெரியும் ? தீவர இலக்கியவாதியா இருக்கணும், இல்ல நம்ம மாதிரி இலக்கியவாதியா வர முயற்சி செய்பவரா இருக்கணும். மேலும் அட்டை படத்தில் என்னை மாதிரி பொது ஜனதுக்கு தெரியாத எழுத்தாளர் படம், ஆனால் அவர் கண்ணாடி, அவரின் போஸ் இரண்டுமே அவர் எழுத்தாளர் என்று தணடோரா அடித்தது.
புத்தகம் வாங்கியாச்சு, அடுத்தது என்ன ? படிக்க வேண்டியது தான் !
முதல்ல படிக்க ஆரம்பித்தது கவிதை.... அதற்கு முன்னால், நமக்கு தெரிந்ததெல்லாம், ஒன்றே ஓன்று தான்..
Solitary reaper
8ஆம் கிளாஸ்ல படித்தது, என்னவோ, அது ஒன்று தான் ஞாபகம் உள்ளது. முன்னமே சொன்ன மாதிரி கதையோ, கவிதையோ நமக்கு அதில் ஒரு இறுக்கமோ அல்லது திறுப்பமோ வேண்டும். Soliatry Reaperல ஒரு இறுக்கம் உண்டு.
ஜெயமோகன் வலைதளத்தில் கவிதைகள் பற்றி படித்தது நினைவுக்கு வந்தது, நமக்கு தெரியாதது பற்றி பேச கூடாது என்ற நாகரீகம் கருதி சிறுகதை பக்கம் போனால், "கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால், அங்க ஒரு கொடுமை திங்கு திங்கு என்று ஆடியதாம்"
ஆலமர் செல்வம், ஜயகாந்தன் ஸ்டெல்ல் "யாருக்காக அழுதது" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி திருத்தம், செதுக்கி இருந்தார்.
கதை சாரம்சம் இது தான்,
ஒரு நாய் ரொம்ப நாளா ஊளையிட்டு ஒரு பேய ( sorry ஒரு ஆள)
பேஜார் பண்ணிட்டு இருந்தது. அந்த் ஆளோட ஆயா ரொம்ப weakஆக இருந்தாக. நாய் ஊளை தாளாம ஒரு நாள் "பொறுத்தது போதும் மகனே பொங்கி எழுனு ஆணையிட்டாஙக" உட்னே நம்ம ஆளு ஒரு தடியோட நாய துரத்த நாய் மெர்ஸ் ஆகி அந்த அளு குரவளைய படுங்கிடுச்சு. அந்த ஆளும் நாய போட்டு தள்ளிட்டாரு. அப்படியெ ஆலமர் அந்த நாய் எதுக்காக ஊளையிட்டதுனு நம்ம guessகு விட்டுடார்.
இது தான் இலக்கிய சிறுகதையா ? வடிவேலு பாணில சொன்னா "நமக்கு தான் உள்ளர்த்தம் புரியலையோ !!!!"

No comments: