Tuesday, November 4, 2008

அசோகமித்ரன் – ஊரின் மிக அழகான பெண்

இதற்கு முன்னால் அசோகமித்ரன் படித்ததில்லை. அழிவற்றவை தான் நான் படிக்கும் முதல் புத்தகம். ஆரம்பம் சில கர்ண பரம்பரை கதைகள், பின்னர் அவர் சிறுகதைகள்.
முதல் கதை, திருநீலகண்டர் - திருவோடைத் தேடி என்ற தலைப்பு பொறுத்தமாக இருக்கும். சிறு வயது முதல் திருவோடை தேடி அலைபவனுக்கு இறுதியில் ஆண்டியாக சென்ற ஒரு சொந்தக்காரர், தன் திருவோடை தபாலில் அனுப்புகிறார்.

என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவில்லை. நகுலனை தான் துனைக்கு அழைக்க வேண்டும். சாருவிடம் கேட்டால் திட்டு தான் விழும். ஒரே சமயத்தில் சாருவின் ஊரில் மிக அழகான பெண் - மொழிபெயர்ப்பு கதைகள், மற்றும் அழிவற்றவை படித்ததின் வினை.

சாருவின் மொழிபெயர்ப்புக் கதைகள் அனைத்துமே கிளாசிக். முக்கியமாக சாருவின் முன்னுரை மிகச் துல்லியமாக கதை களம் மற்றும் எழுத்தாளரின் மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.  ஒவ்வொரு கதையும் ஹான்டிங் ( Hauting ) வகை.ஒரு சிறுகதை இவ்வளவு தாக்கம் எற்படுத்துவது எனக்கு இது தான் முதல் முறை.

No comments: